நான் எப்ப "அபார்ஷன்" செய்தேன்.. கொந்தளிக்கும் பூனம் பாண்டே!
மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ரகசியமாக அட்மிட் ஆகி தனது கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றும் பூனம் பாண்டே மறுத்துள்ளார்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் என்றும் பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகியிருந்த செய்தியில், ஜனவரி 18ம் தேதி இந்துஜா மருத்துவமனையில் சேர்ந்து கர்ப்பத்தை அவர் கலைத்துக் கொண்டதாகவும், அடிக்கடி இந்துஜா மருத்துவமனைக்கு சமீப காலமாக பூனம் பாண்டே வந்து சென்றார் என்றும் இந்த முறை அவர் அபார்ஷன் செய்வதற்காக வந்திருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.
Good morning, Here is my legal team taking action against this FAKE NEWS.. pic.twitter.com/a4mMBpCjjZ
— Poonam Pandey (@iPoonampandey) January 20, 2016
இதுகுறித்து பூனம் கூறுகையில் எல்லாம் தவறான செய்திகள். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் 18, 19 ஆகிய இரு தேதிகளிலும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன். நான் இந்துஜா மருத்துவமனைக்கு இதுவரை போனதும் இல்லை. இது தவறான செய்தி. இதை வெளியிட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பேன்.
எனக்கும் சாக்ஷி கன்னாவுக்கும் இடையே காதல் இருப்பதாக வரும் செய்தியும் தவறு. அவரை நான் டேட் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.
தற்போது ஹெலன் என்ற படத்தில் நடித்து வருகிறார் பூனம். பழம் பெரும் நடிகையான ஹெலன் குறித்த படம் இது. இது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது. இது போக மேலும் 2 படங்களிலும் நடித்து வருகிறாராம் பூனம்.