இந்தியாவை தாலிபான் மயமாக்கும் அரசு- ஆபாச இணையதள முடக்கத்திற்கு மிலிந்த் தியோரா கண்டனம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவில் 857 ஆபாச இணைய தளங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. இதற்கு முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மிலிந்த் தியோரா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவை தாலிபான் மயமாக்குவது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருக்கிறது. இந்த இணைய தளங்கள் முடக்கம் என்பது ஆபாச படங்கள் விருப்பத்திற்கா இல்லையா என்பதற்காக இல்லை.

தனிநபரின் உரிமைகளை அரசு கடத்திச் செல்வது போல் ஆகும். தனிப்பட்ட விஷயம் என்பது நமது அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள உரிமையாகும்" என்று கூறியுள்ளார்.
ஆபாச இணையதளங்களை தொடர்ந்து எதை முடக்கப் போகிறீர்கள்? டெலிபோனையா அல்லது டிவியையா என்றும் அவர் அதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications