இலங்கை கொலையை பெங்களூரில் நடந்ததாக பேஸ்புக்கில் வீடியோ ஷேர் செய்த தொழிலதிபர் கைது!
பெங்களூர்: பெங்களூரு நகர ஷாப்பிங் மாலில் நடைபெற்றதாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவால், தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூர் நகரின் கே.ஆர்.மொகல்லா பகுதியை சேர்ந்தவர் 32 வயதான தொழிலதிபர் தீபக் குல்கர்ணி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி தனது பேஸ்புக்கில் கொலை தொடர்பான ஒரு வீடியோவை பதிவு செய்து, இந்த படு பயங்கர கொலை பெங்களூரின் மையப்பகுதியிலுள்ள ஒரு ஷாப்பில் மாலில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு ஷேர் செய்திருந்தார்.

இந்த வீடியோ துரிதமாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. சம்மந்தபட்ட பகுதியை சேர்ந்த போலீசார், ஷாப்பிங் மாலுக்கு விரைந்து சென்று, கொலை நடந்தது உண்மையா என்று விசாரித்துள்ளனர். ஆனால், அங்கு அப்படி ஏதும் நடைபெறவில்லை என்ற தகவல் தெரியவந்தது.
இதையடுத்து வீடியோவை ஆய்வு செய்து பார்த்தபோது, அந்த சம்பவம் இலங்கையில் முன் எப்போதோ, நடைபெற்றது என்று தெரியவந்தது. இதையடுத்து, வதந்தி பரப்பிய குற்றத்திற்காக, தீபக் குல்கர்ணி கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.
பெங்களூர் மத்திய பிரிவு துணை கமிஷனர் சந்தீப் பாட்டில் இதுபற்றி கூறுகையில், "இலங்கை மாலில் நடந்த சம்பவத்தை பெங்களூர் என்று குல்கர்ணி குறிப்பிட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நகரின் மையப்பகுதியில் படு பயங்கர கொலை நடந்துள்ளது.. போலீஸ் கண்டுகொள்ளவில்லை என்ற ரீதியில் புகார்கள் வந்தன. மக்களை தவறாக வழிநடத்திதற்காக குல்கர்ணி மீது வழக்குபோடப்பட்டது. சோஷியல் மீடியாக்கள் வழியாக மக்களை பீதிக்குள்ளாக்குவதை தடுப்பதே எங்கள் நோக்கம்" என்றார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications