நான் கற்பழிச்சேனா, கொலை செய்தேனா?... 'பிங்க் ஜட்டி' முத்தலிக் டென்ஷன்!
டெல்லி: தன்னை பாஜகவில் சேர்த்து விட்டு பின்னர் அதை ரத்து செய்தது குறித்து பிரமோத் முத்தலிக் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் சேனா தலைவரான பிரமோத் முத்தலிக் ஒரு சர்ச்சைக்குரியவர். பல சர்ச்சைகளிலும் இவர் சம்பந்தப்பட்டவர். இந்த நிலையில் இவர் திடீரென பாஜகவில் சேர்ந்தார். இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்து விட்டன.
மோடியை எப்படியாவது பிரதமராக்கி விட வேண்டும் என்ற துடிப்புடன் உள்ள நேரத்தில் இவரால் பிரச்சினை வேண்டாமே என்று நினைத்துப் பயந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு முத்தலிக்கை பாஜகவில் சேர்த்ததை ரத்து செய்து உத்தரவிட்டு விட்டார்.

இதனால் முத்தலிக் அப்செட்டாகியுள்ளார். தான் என்ன தவறு செய்தேன் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஹூப்ளியில் இருந்தபடி அவர் அளித்த பேட்டியில், இன்னும் ஓரிரு நாட்களில் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
நான் தவறு செய்துள்ளேன் என்றால் அதை கோர்ட்தான் பார்த்து தண்டிக்க வேண்டும். தீர்ப்பளிக்க முடியும். ராஜ்நாத் சிங் தீர்ப்பு தர முடியாது. மாநில பாஜக தலைவர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்கள் நடந்ததற்காக என்னிடம் மன்னி்ப்பு கேட்டுக் கொண்டனர்.
எனது ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர். நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். அவசரப்பட்டு விட்டது பாஜக. ஆனால் நான் பாஜகவுக்கு ஆரவாகவே இருப்பேன்.
இந்த முடிவுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். உள்ளது.என்னைப் போன்றவர்களால்தான் பாஜக கர்நாடகத்தில் வலுவாக உள்ளது. மற்றவர்களை எம்.பிக்களாகவும், எம்.எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்க நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், சிறைக்குப் போகிறோம், தடியடிகளைப் பரிசாகப் பெறுகிறோம். நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன். நான் அவர்களுக்கு உறுத்தலாக தெரிகிறேன் போலும்.
பாஜகவில் ஊழல் செய்யாதவர்களே இல்லையா. அவர்கள் அவர்களுக்கு உறுத்தலாக இல்லையா. நான் ஏழை. பணம் இல்லை. சம்பாதிக்கவும் இல்லை. இந்தியாவின் தார்மீக நெறிகளை பரப்ப முயற்சித்ததற்காக சிறைக்குப் போனவன். எனக்குப் பதில் வேண்டும்.
நான் யாரையாவது கற்பழித்தேனா. கொலை செய்தேனா.. என்ன குற்றம் செய்தேன் என்று கோபமாக கேட்டுள்ளார் முத்தலிக்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications