பிரணாப் முகர்ஜிக்கு வயிற்று வலி.. .மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரணாப் முகர்ஜி, கடந்த 11 ம் தேதி தனது 79வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தநிலையில் அவருக்கு நேற்று கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு நாள் மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செய்தித்துறை செயலாளர் வேணு ராஜாமணி கூறுகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை ஒரு நாள் மட்டும் சிகிச்சைக்காக தங்க வேண்டும் என அறிவுரை கூறினர். இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.