கர்ப்பமா என சோதனை.. ம.பி போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்
மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்தியப்பிரதேசத்தில் போலீஸ் தேர்வுக்கு வந்த மாணவிகளை கர்ப்பமாக உள்ளார்களா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்பவர்களுக்கான தகுதி விபரங்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. பெண்களுக்கான உயரம் எவ்வளவு என அரசு குறிப்பிடவில்லை.
இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர நடந்த தகுதி தேர்வில் பெண்களுக்கான உயரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண்கள் போராட்டம் நடத்தினர்.

விடுவிப்பு
அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

மோசமாக நடத்தப்பட்டோம்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிறையில் போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டோம் என குற்றம் சாட்டினார்கள்.

செல்போன் பறிப்பு
தாங்கள் கிரிமினல்கள் போன்று நடத்தப்பட்டோம் என்றும் போபாலுக்கு மூன்று மணி நேரம் வேனில் பயணித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு பெற்றோரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

கர்ப்ப சோதனை
சிறைக்கு இரவு அழைத்து செல்லப்பட்டதாகவும் சிறைக்கு சென்றதும், தனியறையில் வைத்து சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம் என்றும் அது கர்ப்பமாக இருக்கிறோமா? என பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

ஆண்களும் நுழைந்தனர்
மேலும் தாங்கள் அடைத்து வைக்கப்பட்ட அறைக்குள் ஆண்களும் நுழைந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர். போலீஸ் தகுதி தேர்வில் பங்கேற்ற மாணவிகளுக்கு கர்ப்பமாக உள்ளனரா என சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications