For Daily Alerts
Just In
ம.பி.: 5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த பஞ்சாயத்து தலைவரின் மகன்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணியை பஞ்சாயத்து தலைவரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பார்த் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் ராஜ்புத். பார்த் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகன். அவர்கள் வீட்டில் 5 குழந்தைகளுக்கு தாயான 35 வயது கர்ப்பிணி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அஜய் அந்த 5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் பற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அஜய் தலைமறைவாகிவிட்டார்.
தலைமறைவாக உள்ள அஜய்யை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
A pregnant woman was allegedly raped by the son of a sarpanch at a village in Madhya Pradesh, police said on Friday.
Story first published: Friday, August 22, 2014, 15:49 [IST]