விவசாயிகளின் பிரச்சனை தீர... நதிகளை இணைப்பது அவசியம்.. மண் சோறு சாப்பிட்டு பிரேமலதா பேச்சு
29வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை டெல்லியில் தேமுதிக தலைவர் பிரேமலதா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது நதி நீர் இணைப்பின் அவசியம் குறித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராடும் விவசாயிகளை தேமுதிக சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா, மண் சோறு சாப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவு
டெல்லியில் இவ்வளவு நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். எப்போதும் தேமுதிக விவசாயிகள் பக்கம் நிற்கும். விவசாயம்தான் நமக்கு மிக முக்கியம்.

நதி நீர் இணைப்பு
விவசாயிகளின் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைத்தது போன்று நதிகளை தேசிய அளவில் இணைக்க வேண்டும். அப்போது விவசாயிகளின் நீர் பிரச்சனை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனைகளும் தீரும்.

மாநில அரசின் பொறுப்பு
நேற்று நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு. இதுகுறித்து தமிழக அரசு ஏன் வாய் திறக்காமல் இன்னும் அமைதியாக உள்ளது. இந்த பிரச்சனையில் மாநில அரசுக்கும் பொறுப்புள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
விவசாயிகளின் பிரச்சனை தீர மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடனடியாக அவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications