விவசாயிகளின் பிரச்சனை தீர... நதிகளை இணைப்பது அவசியம்.. மண் சோறு சாப்பிட்டு பிரேமலதா பேச்சு
29வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை டெல்லியில் தேமுதிக தலைவர் பிரேமலதா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது நதி நீர் இணைப்பின் அவசியம் குறித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராடும் விவசாயிகளை தேமுதிக சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா, மண் சோறு சாப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவு
டெல்லியில் இவ்வளவு நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். எப்போதும் தேமுதிக விவசாயிகள் பக்கம் நிற்கும். விவசாயம்தான் நமக்கு மிக முக்கியம்.

நதி நீர் இணைப்பு
விவசாயிகளின் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைத்தது போன்று நதிகளை தேசிய அளவில் இணைக்க வேண்டும். அப்போது விவசாயிகளின் நீர் பிரச்சனை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனைகளும் தீரும்.

மாநில அரசின் பொறுப்பு
நேற்று நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு. இதுகுறித்து தமிழக அரசு ஏன் வாய் திறக்காமல் இன்னும் அமைதியாக உள்ளது. இந்த பிரச்சனையில் மாநில அரசுக்கும் பொறுப்புள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
விவசாயிகளின் பிரச்சனை தீர மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடனடியாக அவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications