விவசாயிகளின் பிரச்சனை தீர... நதிகளை இணைப்பது அவசியம்.. மண் சோறு சாப்பிட்டு பிரேமலதா பேச்சு
29வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை டெல்லியில் தேமுதிக தலைவர் பிரேமலதா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது நதி நீர் இணைப்பின் அவசியம் குறித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று 29வது நாளாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராடும் விவசாயிகளை தேமுதிக சார்பில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா, மண் சோறு சாப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆதரவு
டெல்லியில் இவ்வளவு நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். எப்போதும் தேமுதிக விவசாயிகள் பக்கம் நிற்கும். விவசாயம்தான் நமக்கு மிக முக்கியம்.

நதி நீர் இணைப்பு
விவசாயிகளின் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நெடுஞ்சாலைகளை ஒன்றிணைத்தது போன்று நதிகளை தேசிய அளவில் இணைக்க வேண்டும். அப்போது விவசாயிகளின் நீர் பிரச்சனை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனைகளும் தீரும்.

மாநில அரசின் பொறுப்பு
நேற்று நிர்வாணப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவு. இதுகுறித்து தமிழக அரசு ஏன் வாய் திறக்காமல் இன்னும் அமைதியாக உள்ளது. இந்த பிரச்சனையில் மாநில அரசுக்கும் பொறுப்புள்ளது.

மத்திய அரசு பேச்சுவார்த்தை
விவசாயிகளின் பிரச்சனை தீர மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உடனடியாக அவர்களது கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications