‛‛4 மாத சர்ச்சை’’.. அயோத்தி ராமர் கோவிலுக்கு முதன்முறையாக சென்றார் ஜனாதிபதி திரெளபதி முர்மு!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்காமல் இருந்தது விவாதத்தை கிளப்பியது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் திரெளபதி முர்முவை புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் சூழலில் அவர் இன்று அகு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 3 அடுக்குகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி கோவில் திறப்புக்கான பிரதிஷ்டை விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கு சிறப்பு பூஜைகள் செய்து 5 வயது பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து தீபாரதனை காட்டி வழிப்பட்டார். அந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.
LIVE: President Droupadi Murmu visits the Ram Temple at Ayodhya, has Darshan and attends Aarti https://t.co/aTY5MIRtZp
— President of India (@rashtrapatibhvn) May 1, 2024
அதன்பிறகு மறுநாளான ஜனவரி 23 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு கோவில் திறக்கப்பட்டுள்ளது. கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராமர் கோவிலுக்கு இன்று முதல் முறையாக ஜனாதிபதி திரெளபதி முர்மு சென்றுள்ளார். கோவில் திறந்து 4 மாதங்கள் கழித்து அவர் முதல் முறையாக இன்று கோவிலில் பாலராமர் சிலையை தரிசனம் செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை, உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் வரவேற்றார். அதன்பிறகு திரெளபதி முர்மு அயோத்தியில் சிறப்பு தரிசனம் மற்றும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோவில் ராமர் கோவில் குபேர் தீலா உள்ளிட்ட கோவில்களில் திரெளபதி முர்மு தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் சராயு பூஜை மற்றும் ஆரத்தி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகையையொட்டி அயோத்தி கோவில் அலங்கரிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 22ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பங்கேற்காத நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பழங்குடியினத்தவர் என்பதால் அவரை பிரதமர் மோடி புறக்கணித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் மேடைக்கு மேடை கூறி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு நடுவே தான் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications