ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஓட்டுபோடப் போவதில்லை
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்று இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளார்.
நாட்டின் 16வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 9 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இம்மாதம் 12ம்தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் கொல்கத்தா தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் வாக்களிக்க பிரணாப்புக்கு உரிமை உள்ளது. இதற்காக தபால் மூலம் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.

ஆனால் பிரணாப்முகர்ஜி, வாக்களிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக குடியரசு தலைவர் மாளிகையின் ஊடக செயலாளர் வேனு ராஜமோனி இன்று தெரிவித்தார்.
கடந்த காலங்களில் குடியரசு தலைவர்களாக பதவி வகித்த பலரும் வாக்களிப்பதை தவிர்த்ததை போலவே முகர்ஜியும் செய்ய தீர்மானித்திருக்கிறார் என்றும் ராஜமோனி கூறினார்.
குடியரசு தலைவர்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவர் தன்னை கட்சி சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்புகிறார். வாக்களிக்க சென்றால் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயம். இது குடியரசு தலைவர் பதவியில் இருப்பவரின் சார்பு நிலைப்பாட்டை காண்பிப்பதாகிவிடும். நோட்டாவுக்கு வாக்களித்தாலும், இந்த நாட்டின் தேர்தல் நடைமுறை மீது ஜனாதிபதிக்கு நம்பிக்கை இல்லை என்பதுபோல ஆகிவிடும். எனவே வாக்களிப்பில் இருந்து ஒதுக்கியிருக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications