வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தின் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பங்கேற்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதலை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

1971-ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது.

President Ram Nath Kovind attends Victory Day Parade in Dhaka

இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 1971-ம் ஆண்டு யுத்த வெற்றி விழா மற்றும் வங்கதேச விடுதலையின் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா சென்றுள்ளார்.

President Ram Nath Kovind attends Victory Day Parade in Dhaka

மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அந்நாட்டு முப்படைகள் சார்பாக 21 குண்டுகள் வழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். பின் வங்கதேசத்தின் தந்தையான முஜ்பூர் ரஹ்மான் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

இன்று டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேச விடுதலை பொன்விழா நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் வங்கதேச முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+