சிறையில் லாலு பிரசாத்தை ஜனாதிபதி மகன் அபிஜித் முகர்ஜி சந்தித்ததால் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil

ரூ38 கோடி கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராஞ்சியில் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை நாள்தோறும் பல அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும் லோக்சபா எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி திடீரென நேற்று லாலுவை சிறையில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்திருக்கிறது.
இது தனிப்பட்ட மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை ஜனாதிபதியின் மகனே சிறைக்கு சென்று சந்திப்பது எப்படி சரியாகும்? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications