பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மோடிக்கு பாபா ராம்தேவ் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க உத்தர பிரதேசத்தில் உள்ளது போல நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, " உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முஸ்லீம் நபர் ஒருவர் அந்த கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் பசுக்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. மொகலாய மன்னர் அவுரங்கசிப் ஆட்சிக்காலத்திலும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு அவர் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Prevent Cow Slaughter in Country: Yoga guru appealed to Modi

அந்த வகையில், பசுக்கள் கொல்லப்படுவதை முற்றிலுமாக தடைசெய்து, முன்னோடி மாநிலமாக உத்தரப்பிரதேசம் விளங்கி வருகின்றது. உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவால் மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியும் என்றால் நாடு முழுவதும் இதனை பிரதமர் மோடியால் நடைமுறைப் படுத்த முடியும். பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் மோடி நாடு முழுவதும் அறிவிக்க வேண்டும்.

நாடு முழுவதிலும் பசுக்களை கொல்ல தடைவிதிக்கப்பட்டால், மத ரீதியிலான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+