10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகும் மோடியின் “கிப்ட்”!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கிப்ட் எனப்படும் புதிய நிதி நகரத் திட்டத்தால் குஜராத் மற்றும் நாடு முழுவதும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
GIFT - கிப்ட் எனப்படும் இந்தத் திட்டமானது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்து வருகிறது. திட்டம் முழுமையாக அமலுக்கு வரும்போது குஜராத் மற்றும் நாடு முழுவதும் 2022ம் ஆண்டு வாக்கில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்குமாம்.
குஜராத் அரசு உருவாக்கிய திட்டமாகும் இது. மோடி முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை தனிப்பட்ட அக்கறை எடுத்து கண்காணித்து வந்தார்.
சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை, நிதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மோடியின் செல்லத் திட்டம்
இது மோடியின் செல்லத் திட்டம். தனிப்பட்ட முறையில் இதில் அக்கறை காட்டி வந்தார். தற்போது அதை முழுமையாக அமலாக்கும் வேலைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். புதிய முதல்வர் அனந்தி பென் படேலும் இதில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று கிப்ட் நிர்வாக இயக்குநர் ரமாகாந்த் ஜா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 10 லட்சம் வேலை
இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் 2020ம் ஆண்டு வாக்கில் 10 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க முடியும் என்றும் ஜா தெரிவித்தார்.

ரூ. 65,000 கோடியில்
இந்தத் திட்டம் ரூ. 65,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிதி மையங்கள்
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உள்ளூர் நிதி மையம் மற்றும் சர்வதேச நிதி சேவை மையம் ஆகியவைதான்.

886 ஏக்கர் நிலத்தில்
கிப்ட் திட்டமானது 886 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இதில் 673 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசால் கையகப்படுத்தப்பட்டு விட்டதாம்.

ஷாங்காய் போல
இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த நகரியமானது, ஷாங்காய், பாரீஸ், லண்டன், டோக்கியோ போல சர்வதேச நிதி நகரமாக மாறும் வாய்ப்புள்ளதாம்.

சபர்மதி ஆற்றங்கரையில்
அகமதாபாத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சபர்மதி ஆற்றங்கரையில் இந்த நிதி நகரத்தை உருவாக்கி வருகிறார்கள். இங்கு ஏற்கனவே பல வங்கிகள், ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்கி விட்டனவாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications