நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.. சொல்கிறார் சுப்பிரமணியன் சாமி!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக மூத்த நீதிபதிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நாட்டில் முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிபதிகளின் புகார் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி நீதிபதிகளின் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகள் தங்களின் கடமையை செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீதிபதிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முக்கியமானவை என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications