அருணாச்சல பிரதேசத்தில் விசாரணை கைதி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் விசாரணை கைதி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு கம்யால்(21). பழைய சம்பு கிராமத்தைச் சேர்ந்த புன்லினாங் திஹக் என்பவர் பாபு மீது காவல் நிலையத்தில் கடந்த 23ம் தேதி புகார் அளித்தார்.

பாபு தன்னிடம் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிவிட்டதாக திஹக் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்தனர்.
இந்நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் 22 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பாபு புதன்கிழமை கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைது செய்யப்பட்ட மறுநாள் விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications