ஹூப்ளி அருகே தனியார் பேருந்தில் தீ: 3 பேர் உடல் கருகி பலி, 12 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹூப்ளிக்கு சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று 15 பேருடன் ஹூப்ளிக்கு கிளம்பிச் சென்றது. பேருந்து ஹூப்ளி அருகே சென்று கொண்டிருக்கும்போது பயணிகள் சிலர் புகைப்பிடித்துள்ளனர்.

பேருந்தில் ரசாயனமும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகள் புகைப்பிடித்தபோது ரசாயனம் பற்றிக் கொண்டு வாகனம் தீப்பிடித்து எரிந்தது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களில் 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கும் மாநிலத்தில் நடந்து வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications