நண்பர்களுக்கு அரசு நிலங்களை குறைந்த விலைக்கு தருவது தான் 'குஜராத் மாடல்': பிரியங்கா
ரேபரேலி: நாட்டு மக்களை பள்ளிக் குழந்தைகள் என்று நரேந்திர மோடி நினைத்துக் கொண்டுள்ளார் அது தவறு என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி கூறினார்.
சோனியாகாந்தி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது தாய்க்கு ஆதரவு கேட்டு பிரியங்கா பேசியதாவது:

ஏ.பி.சி.டி என காங்கிரஸ் அரசில் நடந்த ஊழல்களுக்கு செல்லப்பெயர் வைப்பதையும், ஆர்.எஸ்.வி.பி என்று எங்கள் குடும்பத்தாரின் பெயர்களை சுருக்கி கூப்பிடுவதையும் தவிர்த்துவிட்டு, மக்களுக்காக என்ன செய்யப்போகிறேன் என்பதை மோடி கூற வேண்டும்.
குஜராத் மாடல் அரசாங்கம் என்றால் என்ன என்று மக்களுக்கு நன்கு தெரியும். "உங்கள் நண்பர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு அளித்ததைத்தான் குஜராத் மாடல்" என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
குஜராத் மாடலால் விவசாயிகள், தொழிலாளர்கள் அடைந்த நன்மைகளை மோடி கூற வேண்டும், அவரது ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை.
"நீங்கள் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் நின்று உரையாற்றவில்லை. இந்த நாட்டின் மக்கள் முன்னிலையில் பேசிக்கொண்டுள்ளீர்கள் என்பதை உணருங்கள். எனவே பொறுப்புடன் பேச கற்றுக்கொள்ள வேண்டும்". இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications