மணிப்பூருக்கு போகாத பிரதமர்.. கிரிக்கெட் மேட்சுக்கு மட்டும் போவாராம்.. பிரியங்கா காந்தி கடும் தாக்கு
ஜெய்ப்பூர்: மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துகொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் மாநிலத்திற்கு வரும் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது என்பது வரலாறு.

எனவே காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கின்றன. காங்கிரஸை பொறுத்த அளவில் முதல்வர் அசோக் கெலாட், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலாட் என இருவருக்கும் இடையே உள்ள சலசலப்புகள் கட்சிக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தீவிரமான பிரசாரத்தின் மூலமாக இதை சரிசெய்து, நிலைமையை மாற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கட்சி திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஷாபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரியங்கா காந்தி, மணிப்பூரில் மாதக்கணக்கில் வன்முறை நடந்துக்கொண்டிருக்கையில் அங்கு செல்லாத பிரதமர் மோடி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார் என விமர்சித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "தன்னை ஒரு துறவி என்று அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடி, அவரது ஆட்சிக்காலத்தில் மட்டும் பாஜகவின் சொத்து மதிப்பு சரமாரியாக உயர்ந்தது எப்படி? என்பதை கூற முயுமா? மணிப்பூரில் கடந்த 7 மாதங்களாக இயல்பு நிலை திரும்பவில்லை. இப்போதும் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. இப்படி இருக்கும்போது அங்கு போகாமல், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க அகமதாபாத்துக்கு சென்றிருக்கிறார்.

அதுவும் இந்திய அணி வெற்றி பெற்றால் அதில் தனக்கு கொஞ்சம் கிரெடிட் கிடைக்கும் என்கிற எண்ணத்தில்தான் சென்றிருக்கிறார். இப்படியாக எங்கெல்லாம் தனக்கு பெருமையும், மரியாதையும் கிடைக்குமோ அந்த இடங்களுக்கு மட்டுமே அவர் செல்கிறார். நெருக்கடி கொடுக்கும் இடத்திற்கு அவர் செல்வது கிடையாது. இது ஒருபுறம் எனில், மறுபுறம் பெரும் தொழிலதிபர்களின் கடன்களை அவர் தலைமையிலான அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்" என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், 8க்கும் மேற்பட்ட மாநில முதலமைச்சர்கள், அமித்ஷா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதிமாக இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications