அமேதியில் உச்ச கட்ட பிரச்சாரம்... பிரியங்கா காந்தி தர்காவில் வழிபாடு
அமேதி: அமேதியில் உள்ள ஹஸ்ரத் மீர் இமாமுதின் தர்காவில் உத்திரப் பிரதேசத்தின் (கிழக்கு) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.
ரேபரேலியில் போட்டியிடும், தனது தாய் சோனியா காந்திகாகவும், அமேதியில் போட்டியிடும் தனது சகோதரர் ராகுல் காந்தியை ஆதரித்தும், பிரியங்கா காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5 ம் கட்டமாக வருகிற 6-ம் மேதி உத்தரபிரதேச மாநிலம் தவுராஹ்ரா, சித்தாபூர், மோகன்லல்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, பைசாபாத், பஹ்ராய்ச், கைசர்கன்ஜ், உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், உச்ச கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா காந்தி.

பிரச்சாரத்திற்கு இடையே, அமேதியில் உள்ள ஹஸ்ரத் மீர் இமாமுடின் தர்காவில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதே போல், சில தினங்களுக்கு முன்பு, அயோத்தியில் உள்ள ஹனுமான் ஹரி கோவிலில் பிரியங்கா காந்தி தரிசனம் செய்தார்.
Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) offers prayers at Hazrat Meer Imamuddin dargah in Amethi. pic.twitter.com/DsgcKFJF3m
— ANI UP (@ANINewsUP) 4 May 2019
ரேபரேலி தொகுதியில் பிரச்சாரத்தின் போது பாம்பாட்டிகளை சந்தித்து, வாக்கு சேகரித்த போது, பாம்பை கண்டு சற்றும் பயமில்லாமல் அசால்ட்டாக கையில் தூக்கி விளையாடினார் பிரியங்கா காந்தி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.












Click it and Unblock the Notifications