பிரியங்கா மகனை ராகுல் தத்தெடுக்கவில்லை! செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா. இவரது கணவன் ராபர்ட் வதேரா. இந்த தம்பதியருக்கு ரேகன் என்ற மகனும், மிரயா என்ற மகளும் உள்ளனர்.
ரேகனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தத்து எடுக்கப்போவதாக ஒரு வாரப்பத்திரிகையிலும், சில ஊடகங்களிலும் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, ரேகனை தத்து எடுத்தால் அவர் "ரேகன் காந்தி" என்று அழைக்கப்படுவார் என்பதற்காகவே தத்து எடுப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏனெனில் ராகுல்காந்தி இன்னும் திருமணம் செய்யாததால் வாரிசுக்காக இவ்வாறு தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இது தவறான செய்தி என்று மறுத்து, அதை வெளியிட்ட அந்த வாரப்பத்திரிகைக்கும், ஊடகங்களுக்கும் பிரியங்கா வதேரா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்.ரேகனின் பள்ளிக்கூட விண்ணப்பத்தில் ராகுல் காந்தியை பாதுகாவலர் என குறிப்பிட்டு, செய்தி வெளியிட்டதற்கும் பிரியங்கா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications