மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது… “பொறுப்புமிக்க மனிதர்களுக்காக”பெற்றார் பூர்ணச்சந்திரன்
"சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் ‘பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக சாகித்ய அகாடமியின் விருதை எழுத்தாளர் பூர்ணச்சந்திரன் பெற்றார்.
டெல்லி: சாகித்ய அகாடமி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதேபோல, 2016ம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், "சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக எழுத்தாளர் பூர்ணசந்திரன் பெற்றுள்ளார்.

இளம் வயது..
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர் பூரணச்சந்திரன். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். மார்க்சிய சிந்தனையாளரான இவர் இதழியல் துறையிலும், மொழிபெயர்ப்பு பணியிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
மொழி பெயர்ப்பு
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக பூரணச்சந்திரன் பணியாற்றியவர். பணி ஓய்விற்கு பின்னர் தீவிர மொழி பெயர்ப்பில் ஈடுபட்ட இவர், அருந்ததி ராயின் 'நொறுங்கிய குடியரசு', தனி நாயகம் அடிகளின் 'நில அமைப்பும் தமிழ் கவிதையும்' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்
இதுதவிர ஆந்திராவின் முக்கிய கவிஞரான வர வர ராவின் 'சிறைபட்ட கற்பனை'மற்றும் வெண்டி டோனிகரின் 'இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு'ஆகிய இரண்டு நூல்களுக்கும் ஆண்டுதோறும் ஆனந்த விகடன் வழங்கும் விருதுகளை பெற்றுள்ளது. மேலும், சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நூலுக்கு பாரதி இலக்கிய அமைப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
எல்லாவற்கும் சிகரம் வைத்தாற்போல் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. "சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக எழுத்தாளர் பூர்ணசந்திரன் பெற்றார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் செப்பு பட்டயமும் அடங்கியது இந்த விருது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications