சிஏஏ வேண்டவே.. வேண்டாம்! கறாராக மறுக்கும் அசாம் மாநிலம்.. தீ பந்தங்களை கையில் ஏந்தி மாணவர்கள் போராட்டம்
திஸ்பூர்: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் சார்பில் கையில் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
நேற்று கவுஹாத்தியில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து பேசிய மாணவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி சமுஜ்ஜல் பட்டாச்சார்யா, "அரசியலமைப்புக்கும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிஏஏ எதிரானது. இது 1985ம் ஆண்டு காங்கிரஸின் ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் போது போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.

அதாவது, வங்கதேசத்திலிருந்து கணிசமான மக்கள் அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், அசாம் மக்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பறிபோயின. இதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் 1979ம் ஆண்டு முதல் அசாம் முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, வங்க தேச மக்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று 1985ம் இந்திய அரசு, மாணவர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டது.
ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ, வங்க மக்களுக்கு குடியுரிமையை வழங்க வழி வகுக்கிறது. எனவேதான் அசாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும், வங்க மக்களின் குடியேற்றத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றே கோருகின்றனர்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உத்பால் சர்மா கூறுகையில், "நாங்கள் எப்போதும் சிஏஏ-வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தையும் நாடியிருக்கிறோம். அசாம் மாநிலம், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சுமையை சுமந்துக்கொண்டிருக்கிறது. இந்த சுமையை இனிமேலும் தாங்க முடியாது. சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும்" என்றும் கூறியுள்ளார்.
சிஏஏ என்ன சொல்கிறது?: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications