சிஏஏ வேண்டவே.. வேண்டாம்! கறாராக மறுக்கும் அசாம் மாநிலம்.. தீ பந்தங்களை கையில் ஏந்தி மாணவர்கள் போராட்டம்
திஸ்பூர்: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் சார்பில் கையில் தீ பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
நேற்று கவுஹாத்தியில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ பந்தங்களை ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து பேசிய மாணவர் சங்கத்தின் மூத்த நிர்வாகி சமுஜ்ஜல் பட்டாச்சார்யா, "அரசியலமைப்புக்கும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் சிஏஏ எதிரானது. இது 1985ம் ஆண்டு காங்கிரஸின் ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் போது போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்திற்கு எதிரானது" என்று கூறியுள்ளார்.

அதாவது, வங்கதேசத்திலிருந்து கணிசமான மக்கள் அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால், அசாம் மக்களின் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பறிபோயின. இதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் 1979ம் ஆண்டு முதல் அசாம் முழுவதும் கடுமையாக போராட்டங்கள் நடத்தியது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, வங்க தேச மக்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று 1985ம் இந்திய அரசு, மாணவர் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டது.
ஆனால், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ, வங்க மக்களுக்கு குடியுரிமையை வழங்க வழி வகுக்கிறது. எனவேதான் அசாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும், வங்க மக்களின் குடியேற்றத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றே கோருகின்றனர்.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் உத்பால் சர்மா கூறுகையில், "நாங்கள் எப்போதும் சிஏஏ-வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தையும் நாடியிருக்கிறோம். அசாம் மாநிலம், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சுமையை சுமந்துக்கொண்டிருக்கிறது. இந்த சுமையை இனிமேலும் தாங்க முடியாது. சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும்" என்றும் கூறியுள்ளார்.
சிஏஏ என்ன சொல்கிறது?: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications