Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக். படகு விவகாரத்தில் சந்தேகம் எழுப்புவதா?.. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு எதிராக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் கடற்பரப்பில் பாகிஸ்தான் படகு வெடிவைத்து தகர்க்கப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்பி செய்தி வெளியிட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டுக்கு எதிராக டெல்லியில் இந்துத்துவா அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து மீன்பிடிப் படகு ஒன்றில் மர்ம நபர்கள் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்தனர். அந்த மீன்பிடிப் படகை கடலோர காவல்படை நெருங்கிய போது அதில் இருந்த 4 பேரும் படகுக்கு தீ வைத்து தகர்த்து தற்கொலை செய்து கொண்டனர்.

Protest against Indian Express over reportage of Pakistani boat incident

இது தொடர்பாக ஜனவரி 3-ந் தேதியன்று செய்தி வெளியிட்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு, படகில் இருந்த 4 பேரும் சாதாரண கடத்தல்காரர்களாக இருக்கலாம்.. அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவு என்று எழுதியிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து சேனா என்ற அமைப்பினர் டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்கு எதிரே இன்று போராட்டம் நடத்தினர். அப்போது பாகிஸ்தானின் குரலாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகிறது என்று குற்றம்சாட்டி அவர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன் அந்த நாளேட்டையும் தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்து சேனாவின் தலைவர் விபு படோடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமது நாளேட்டின் பெயரை பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று விமர்சித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+