ஈராக் வன்முறையை கண்டித்து டெல்லியில் தொண்டு நிறுவனங்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.இந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட இந்தியர்களின் மீட்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் ஈராக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்தான் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு, ஈராக்கில் நடக்கும் வெறிச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடத்தினர்.
ஈராக்கியர்களிடம் மாட்டித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மத பேதத்தினால் ஈராக் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications