வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இனி இந்தியா வர தேவையில்லை.. உறவினர்கள் வாக்களிக்கும் முறைக்கான திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அகமதாபாத்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை; அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜக மகளிர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

இந்தியாவில் வாக்களிப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது வாக்களிக்க வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவுக்கு வர வேண்டும்.

உறவினர்களுக்கு அனுமதி
ஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம்.

அத்தாஅட்சி கடிதம்
இதற்கான அத்தாட்சி கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது.

பிரதமர் மோடிக்கு பாராட்டு
மத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற வகையில் நானும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications