வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இனி இந்தியா வர தேவையில்லை.. உறவினர்கள் வாக்களிக்கும் முறைக்கான திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அகமதாபாத்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை; அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜக மகளிர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

இந்தியாவில் வாக்களிப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது வாக்களிக்க வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவுக்கு வர வேண்டும்.

உறவினர்களுக்கு அனுமதி
ஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம்.

அத்தாஅட்சி கடிதம்
இதற்கான அத்தாட்சி கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது.

பிரதமர் மோடிக்கு பாராட்டு
மத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற வகையில் நானும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications