Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்...தொடங்கியது 29 மணி நேர கவுண்டவுன்!

பி.எஸ்.எல்.வி சி-39 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 29 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்கியது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டோ : ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி சி -39 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்டவுன் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 31ம் தேதி பி.எஸ்.எல்.வி. வரிசையில் சி-39 ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

 PSLV C 39 all set ready for the launch, 29 hours countdown started

ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 7 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.

இதனையொட்டி இறுதிகட்ட பணியான 29 மணிநேர கவுண்ட்டவுன் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+