புனேயில் நிலச்சரிவு: 15 பேர் பலி- 150 பேரின் கதி என்ன?
Subscribe to Oneindia Tamil
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே ஆம்பே என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 150 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புனே அருகே ஆம்பே மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திடீரென இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 45 வீடுகள் மண்ணில் புதையுண்டன.

இந்த நிலச்சரிவில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 80 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications