பஞ்சாப்பில் மருந்து வாங்க போன விவசாயி.. 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆனார்.. அடித்த ஜாக்பாட்
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்ற விவசாயி, லாட்டரி வாங்கிய நிலையில், அடுத்த 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் ரூ.2.5 கோடிக்கு அதிபதியாகி உள்ளார்.
லாட்டரியில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. ஆனால் பலருக்கும் லாட்டரி ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. உழைக்காமல் கோடீஸ்வராக விரும்பி பலர் அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி வாங்கி வீணாக போயிருக்கிறார்கள். உழைத்த பணத்தை எல்லாம் லாட்டரி சீட்டு வீணாவது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டு உள்ளது.. நம்மூரைச் சேர்ந்த பலர் கேரளாவில் லாட்டரி வாங்குவார்கள். கேரளாவை தாண்டி, பஞ்சாப், மிசோரம், நாகலாந்து, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில லாட்டரி சீட்டு விற்பது தொடர்ந்து வருகிறது.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிக்கு நல்ல ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் சிங் என்ற விவசாயி ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. இவர் தன் குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால், மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்றிருக்கிறார். மருந்து வாங்கிய நிலையில், அருகில் உள்ள கடையில் லாட்டரி இருப்பதை கண்டார். அந்த கடையில் ஒரு லாட்டரி சீட்டையும் வாங்கியுள்ளார். தொடர்ந்து மருந்து வாங்கி விட்டு வீட்டுக்குத் திரும்பி உள்ளார்.
இதனிடையே ஷீத்தல் சிங்கிற்கு சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு, லாட்டரி கடை நடத்தும் உரிமையாளரிடமிருந்து ஒரு போன் வந்திருக்கிறது. ஷீத்தல் சிங்கிடம் 2.5 கோடி ரூபாய் வென்றதாக லாட்டரி கடை உரிமையாளர் கூறியுள்ளார். இதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
உடனே இந்த சந்தோஷமான செய்தியை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பணத்தைச் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளார். லாட்டரி கடையின் உரிமையாளர், கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து வந்துள்ளளார். வாடிக்கையாளர் ஒருவர் கோடிக்கணக்கில் பணம் பெறுவது தன்னிடம் இது மூன்றாவது முறை என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications