Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10000000 கூரையினை பிச்சிட்டு கொட்டி.. ஜஸ்ட் 6 ரூபாய் லாட்டரி டிக்கெட்டில் வந்த அதிர்ஷ்டம்.. குஷி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: லாட்டரி மோகம் இந்திய மக்களிடம் குறையவேயில்லை.. என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்ட காற்று வீசும் என்ற நம்பிக்கையில் லாட்டரி டிக்கெட்டை தொடர்ந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள்.. ஆனாலும், ஒரு சிலருக்கே அப்படியான அதிர்ஷ்டம் அடிக்கிறது.. இதோ பஞ்சாப் மாநில கூலித் தொழிலாளி, ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம்தான் இணையத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.. யாரிந்த தொழிலாளி?

சில மாதங்களுக்கு முன்பு, பஞ்சாப் ராக்கி பம்பர் லாட்டரியில் 67 வயதான ஸ்கிராப் டீலருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.. அதாவது, லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

rs6 lottery ticket rs1 crore punjap 6 1

50 வருடம் பழக்கம்

ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 67 வயதான ப்ரீதம் லால் ஜக்கி என்பவருக்குதான், இந்த பரிசு விழுந்தது.. ப்ரீதம் லால் கடந்த 30 ஆண்டுகளாக ஜலந்தரில் ஸ்கிராப் டீலர்ஷிப் செய்து வந்தாலும் பெரிதாக லாபம் எதுவுமில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.. ஆனால், 50 வருடங்களாகவே தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்திருக்கிறார் ப்ரீதம் லால்.

அப்படித்தான், கடந்த ரக்‌ஷா பந்தன் பண்டிகை தினத்தன்றும், 500 ரூபாய் கொடுத்து தனது மனைவி பெயரில் ராக்கி பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் ப்ரீதம் லால்... லாட்டரி சீட்டு 452749 எண்ணிற்கு அதாவது, ப்ரீதம் லால் வாங்கிய லாட்டரிக்கு 2.5 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.. இதை கேட்டதுமே திக்குமுக்காடிப்போனார் ப்ரீதம் லால்..

கோடீஸ்வரர்

பல வருட காலம் வறுமையில் வாடிய நிலையில், ஒரே நாளில் ப்ரீதம் லால் கோடீஸ்வரர் ஆகிவிட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுக்க பரபரத்தது... 50 வருடமாக லாட்ட டிக்கெட்டை வாங்கி வந்தாலும், முதன்முதலாக 1 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கினாராம்.. அப்போது முதல், இன்று 500 ரூபாய் லாட்டரி டிக்கெட் வரை சளைக்காமல் வாங்கி வந்ததுடன், அதில் பலனையும் பெற்றது, மீடியாக்களின் கவனத்தை பெற்றிருந்தது.

தனக்கு இதுவரை சொந்த வீடு இல்லாததால், இனி ஒரு வீடு கட்டி மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க போவதாகவும், மிச்சமுள்ள லாட்டரி பணத்தில் 25 சதவீதத்தை சமூகப்பணிக்கு செலவழிக்க போவதாகவும் ப்ரீதம் லால் ஜக்கி கூறியிருந்ததும் அம்மாநில மக்களின் கவனம் பெற்றது.

செங்கல் சூளை தொழிலாளி

மோகா மாவட்டத்தை சேர்ந்த அந்த தொழிலாளி பெயர் ஜாஸ்மயில் சிங்.. இவர் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் பெரோஷ்பூருக்கு சென்றபோது, ரூ.6க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார்..

மறுநாள் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்தவரிடமிருந்து, ஜாஸ்மயில் சிங்குக்கு போன் வந்துள்ளது.. அதில், ஒரூ.1 கோடியை வென்றுள்ளீர்கள் என்று சொன்னதை கேட்டு, இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார் ஜாஸ்மயில்..

உடனே, இசை வாத்தியங்களுடன் அவரது குடும்பத்தினருடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்... கிலோ கணக்கில் ஸ்வீட்களை வாங்கி, அந்த பகுதி மக்களுக்கெல்லாம் தந்து கொண்டிருக்கிறார் ஜாஸ்மயில்.. மகிழ்ச்சியை பகிர்ந்தார்.

வெறும் 6 ரூபாய் டிக்கெட்

இது குறித்து ஜாஸ்மயில் சிங் சொல்லும்போது, இந்தப் பணத்தை வைத்து ரு.25 லட்சம் கடனை அடைப்பேன். மிச்ச தொகையை என்னுடைய குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக பயன்படுத்துவேன் என்கிறார்....

பஞ்சாப் மாநிலத்தில் ரூ.6க்கு லாட்டரி வாங்கிய கூலித் தொழிலாளிக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ள சம்பவம் இணையத்திலும் பேசுபொருளாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+