கள்ளக்காதலியுடன் தொடர்பு வைத்த கணவன்... மர்ம உறுப்பை அறுத்தெறிந்து பாடம் புகட்டிய மனைவி!
தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனின் மர்ம உறுப்பை வெட்டி எரிந்துள்ளார் பஞ்சாப்பை சேர்ந்த பெண்.
ஜலந்தர்: தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனின் மர்ம உறுப்பை வெட்டி மனைவி பாடம் புகட்டியுள்ளார்.
பஞ்சாபின் ஜோஹிந்தர் நகரைச் சேர்ந்தவர் ஆசாத் சிங், இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாத் சிங்கின் நிலைமைக்கு அவரது மனைவியே காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளார்.
ஆசாத் சிங்கின் நிலைமை குறித்து அவரது மனைவி சுங்வந்த் கவுரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசாரிடம் அதிர்ச்சியளிக்குமம் விஷயத்தை கூறியுள்ளார் அந்தப் பெண்.
பெண்களுடன் தொடர்பு
என்னுடைய கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. நான் பல முறை எச்சரித்தும் அவர் இதனை பொருட்படுத்தவில்லை, அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறி விட்டது.
ஆத்திரத்தில் வெட்டினேன்
இதனால் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது ஆசாத் சிங்கின் மர்ம உறுப்பை வெட்டி, கழிவறையில் போட்டுவிட்டேன் என்று சுக்வந்த் கவுர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உதவி கேட்டு ஆசாத் அலறிய சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பாடம் புகட்டிய மனைவி
ஆசாத் சிங்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு பாடம் புகட்டினாலும் ஆசாத்தின் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசாத் சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். கவுர் கத்தியை பயன்படுத்தி ஆசாத்தின் மர்ம உறுப்பை வெட்டியுள்ளதால் அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.