பூரி ரயில் நிலைய தொடர் தீ விபத்து- தீவிரவாதிகளுக்கு தொடர்பு? என்.ஐ.ஏ. உதவியை நாடும் ஒடிஷா போலீஸ்!!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களில் அடுத்தடுத்து தீ பிடித்த சம்பவத்துக்கு தீவிரவாதிகள் நாசவேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. உதவியை நாட ஒடிஷா போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பூரி ரயில் நிலையத்தில் நவம்பர் 12-ம் தேதி அடுத்தடுத்து 3 ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் நந்தன்கன்னன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்தது.

இந்த ரயில் 4-வது பிளாட்பாரத்தில் டெல்லி செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது ரயிலின் 11 மற்றும் 12-வது பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது சிறிது நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் இருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பரவியது. பின்னர் பூரி-ஹவுரா எ்க்ஸ்பிரஸ் ரயிலிலும் தீ பரவி ரயில் நிலையம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒடிஷா மாநில ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இத்தீவிபத்துக்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என அம்மாநில போலீஸ் சந்தேகிக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல்துறை இயக்குனர் கே.பி.சிங் கூறியதாவது:
இதற்கு முன்பு ஹைதராபாத், கயா, கராக்பூர், ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டது. பூரி ரயில்களில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் சுபாஷ் என்பரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மும்பையைச் சேர்ந்த சிலர் நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் ரயில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களை நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக ராமச்சந்திர சுபாஷுக்கு ஒரு லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தீவிரவாத அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. உதவியை நாடி இருகிறோம்.
இவ்வாறு கே.பி.சிங். என்று தெரிவித்தார்.
-
பிரிட்ஜில் திறந்து பார்த்து ஷாக்கில் நடுங்கிய போலீசார்.. அப்பார்ட்மெண்ட் கிச்சனில் யார் இந்த தம்பதி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications