டெல்லி விமான நிலையத்தில் திடீர் கதிரியக்க கசிவு.. பயணிகள் பீதி!
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவு ஏற்பட்டதால் பயணிகள் கடும் பீதியடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தின், சரக்கு பெட்டக பகுதியில் இன்று மதியம் திடீரென கதிரியக்க பீதி ஏற்பட்டது. சிலரது கண்களில் எரிச்சல் உருவாகியது. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர்.

சில நிமிடங்களில் கதிரியக்கம் வந்த பகுதி கண்டறியப்பட்டது. துருக்கியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய ஒரு சரக்கு பெட்டகத்தில் இருந்து கசிவு வந்தது தெரியவந்தது. சில நிமிடங்களில் அது முற்றிலும் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டகத்தில் அணு தொடர்பான பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களால் விமான நிலையத்தில் பயணிகள் பீதிக்கு உள்ளாகினர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. யாரும் அச்சப்பட வேண்டாம், நிலைமை சரி செய்யப்பட்டுவிட்டது என்றார்.

இந்த சம்பவம் பற்றி கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications