வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருது – ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜனுக்கு!
டெல்லி: வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருதுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பத்திரிகையான சென்ட்ரல் பேங்கிங் தனது 2015 ஆம் ஆண்டுக்கான விருதுகளில் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை வங்கிகளுக்கான சிறந்த ஆளுநர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அந்த இதழ் குறிப்பிடும் போது, "ஆளுநரான முதல் ஆண்டே ரகுராம் ராஜன் மிக ஒழுக்கமாக, மிகுந்த கவனத்துடன் மத்திய ரிசர்வ் வங்கியை தலைமையேற்று நடத்தியுள்ளமை அபாரமானது" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விருது லண்டனில் மார்ச் 12 ஆம் தேதி வழங்கப்படுகிறது.
இந்த விருதினை ஏற்றுக் கொண்ட ரகுராம் ராஜன், "ஆண்டின் சிறந்த வங்கி ஆளுநர் விருதுக்கு என்னைத் தேர்வு செய்ததை கவுரவமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம், பகுதியளவில் நம் பொருளாதாரத்தின் பரந்துபட்ட நிலைத்தன்மைக்காகப் பாடுபட்ட ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஊழியர்களைச் சாரும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications