ராகுலும் குழப்பத்தில், காங்கிரஸும் குழப்பத்தில்: என்ன கொடுமை சார் இது- பாஜக நக்கல்
டெல்லி: விடுப்பில் சென்று திரும்பியுள்ள ராகுல் காந்தியும், காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 57 நாட்கள் விடுப்புக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி திரும்பினார். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,

பகுதி நேர அரசியல் என்ற ஒன்று இல்லை. இது முழு நேர வேலை. உங்கள் பொறுப்பில் இருந்து திடீர் என்று பின்வாங்க முடியாது. விடுப்பில் இருந்து திரும்பி வந்துள்ள ராகுல் என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறார். ராகுலை கட்சியின் தலைவர் ஆக்கலாமா இல்லை ஓரங்கட்டலாமா என்பது தெரியாமல் காங்கிரஸும் குழப்பத்தில் உள்ளது.
ராகுல் விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசப் போகிறாராம். எந்த விவசாயி பற்றி அவர் பேசுவார்? பாங்காக்கில் இருந்து கொண்டு விவசாயிகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்திருப்பாரோ?
அரசியலில் ஐட்டம் நம்பர் இல்லாமல் இருந்தது. ராகுல் விடுப்பில் சென்று வந்தது ஐட்டம் நம்பர் ஆகியுள்ளது. 2 மாதம் விடுப்பில் செல்வது பற்றி ராகுல் மக்களிடம் கேட்டாரா?
இந்திய அரசியலில் முதல் முறையாக அரசியல் கட்சியின் முக்கிய நபர் ஒருவர் பல காலம் மாயமாகி திரும்பி வந்துள்ளது பெரிய செய்தியாகியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications