ஏழைகளிடமிருந்து பறித்து நீரவ் மோடியின் பாக்கெட்டில் நிரப்பிய மோடி... ராகுல் #CashCrunch
500, 1000 நோட்டுகளை மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு பெரும் பணக்காரர் நீரவ் மோடியின் பாக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிரப்பியுள்ளார் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
Recommended Video

டெல்லி: பணமதிப்பிழப்பின் மூலம் பெற்ற நோட்டுகளை நீரவ் மோடியின் பாக்கெட்டில் போட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ரூ.500 , ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதனால் மக்கள் தங்களிடம் உள்ள அந்த நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூ. 2000-ஆக மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால் ஏடிஎம், வங்கி வாசல்களில் அன்றாட பிழைப்பை விட்டு விட்டு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

அதிர்ச்சி
இந்த சம்பவத்தால் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பணமதிப்பிழப்பு விவகாரம் செய்திருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தின. இது இவ்வாறிருக்க கடந்த 3 நாட்களாக வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பணம் எடுக்காமல் தவிப்பு
இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர். வடமாநிலங்களிலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் அவசரத் தேவைக்குகூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய காலமான தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

ஒன்றரை ஆண்டுகள்
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறுகையில் பணமதிப்பிழப்புக்கு பின்னர் பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் பணத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.

நீரவ் மோடியின் பாக்கெட்
பணத்தட்டுப்பாடு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் ரூ. 30,000 கோடியை கடனாக பெற்றுக் கொண்டு நீரவ் மோடி எங்கோ சென்றுவிட்டார். ஆனால் பிரதமர் வாயே திறக்கவில்லை. நம்மை வங்கி முன்பு வரிசைகளில் நிற்க வைத்துவிட்டு நம்மிடம் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகளை பறித்து நீரவ் மோடியின் பாக்கெட்டில் போட்டுவிட்டனர்.

ரபேல் விமானம்
நாடாளுமன்றத்தில் பேசவே பிரதமர் பயப்படுகிறார். எங்களுக்கு 15 நிமிடங்கள் நேரம் தந்தால் போதும் ரபேல் விமான கொள்முதல், நீரவ் மோடி நாட்டை விட்டு பறந்த விவகாரம் ஆகியவற்றின் பின்புலத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்றார் ராகுல் காந்தி.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications