நாடாளுமன்றத்தில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குட்டித் தூக்கம் போட்டது சலசலப்பாகியுள்ளது.
ராகுல் காந்தி தூக்கம் போட்டது புகைப்படமாக வெளியாகியுள்ளது. தன்னைப் பலரும் பார்த்தபோதும் ராகுலின் தூக்கம் கெடாமல் தொடர்ந்ததுதான் ஆச்சரியம்.

ராகுல் காந்தி தூங்கும்போது அவரது தலை வலது பக்கமாக லேசாக சாய்ந்திருந்தது. கண்கள் நன்கு மூடியிருந்தன. இது இப்போது பேஸ்புக் முதல் எல்லா சமூக வலைதளங்களிலும் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசேன் டிவிட்டரில் கமென்ட் போட்டுள்ளார். அதில், விலைவாசி குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார். இதைத்தான் கடந்த 10 வருடமாக காங்கிரஸ் கட்சியும் செய்து கொண்டிருந்தது என்று நக்கலடித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Rahul's nap! Sify cartoon <a href="https://twitter.com/hashtag/RahulCatNap?src=hash">#RahulCatNap</a> <a href="http://t.co/a9BXppRE2O">pic.twitter.com/a9BXppRE2O</a></p>— Satish Acharya (@satishacharya) <a href="https://twitter.com/satishacharya/statuses/487095208375382016">July 10, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>விடுங்கப்பா.. தேவெ கெளடா தூக்கமெல்லாம் மறந்து போச்சா.. இது சின்னத் தூக்கம்தானே!












Click it and Unblock the Notifications