ராகுலுக்கு ஆளும் நிர்வாகத் திறமை இயற்கையிலேயே கிடையாது: திக்விஜய் சிங் தாக்கு!

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். இதற்கு ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் ராகுல் காந்தியை மிகக் கடுமையாக வெளிப்படையாகி தாக்கி பேட்டி கொடுத்துள்ளார்.
கோவாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திக் விஜய் சிங், லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றிருக்க வேண்டும். அவருக்கு இயற்கையாகவே ஆளும் நிர்வாகத் தகுதி என்பது இல்லை.
ஜனநாயகத்தில் எதிர்கட்சி இடம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் கட்சிதான் பெரிய கட்சியாக உள்ளது. எனவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
திக்விஜய்சிங்கின் இந்த வெளிப்படையான விமர்சனம் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications