ராகுலும், முலாயமும் அண்ணன் தம்பி போல... அமேதி தாக்குதல் குறித்து ஆம் ஆத்மி விமர்சனம்
டெல்லி: ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸார் மீது உத்திரப்பிரதேச போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள ஆம் ஆத்மி, இந்த விஷயத்தில் ராகுலும், முலாயமும் சகோதரர்கள் போல செயல் படுவதாகவும் விமர்சித்துள்ளது.
கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான அமேதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் ஆம் ஆத்மி கட்சியினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அத்தாக்குதல் சம்பவம் குறித்து தகுந்த வீடியோ காட்சிகள் அளித்தும் உத்தர பிரதேச போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, மாநில போலீஸ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல் படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் அசுதாஸ் தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ‘தகுந்த வீடியோ ஆதாரங்கள் வழங்கப்பட்டும் ஆம் ஆத்மியினர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசார் மீது உத்தரபிரதேச போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தியும், முலாயம் சிங் யாதவும் சகோதரர்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications