கட்சியை வழி நடத்த ராகுல் விருப்பம் தெரிவித்துள்ளது காங்கிரஸாருக்கு மகிழ்ச்சி: எஸ்.எம். கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்க தயார் என்று பிரதமர் பதவியை ஏற்பது பற்றி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில்,
ராகுல் காந்தி பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கட்சியை வழிநடத்த விருப்பம் தெரிவித்துள்ளது அவருடைய தலைமை குணத்தை காண்பிக்கிறது. அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அவர தனது குழுவை ஒருங்கிணைத்து வருகிறார். அனுபவம் அவருக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கும். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார்.












Click it and Unblock the Notifications