மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் "ரபேல் மினிஸ்டர்" நிர்மலா சீதாராமன் - ராகுல் கடும் தாக்கு
டெல்லி: "ரபேல் மினிஸ்டர்" நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் ரபேல் மினிஸ்டர் என்று விளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள ரபேல் மினிஸ்டர் தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னாள் எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.
ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்ஏஎல் நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளார். இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது, ஏற்க முடியாது. அவர் தனது பதவியில் நீடிக்கும் தகுதியையும் இழந்து விட்டார். அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.
The RM (Rafale Minister) tasked with defending corruption has been caught lying again. The former HAL Chief, T S Raju, has nailed her lie, that HAL didn’t have the capability to build the RAFALE. Her position is untenable & she must resign. https://t.co/7mKXV5wo8x
— Rahul Gandhi (@RahulGandhi) September 20, 2018
முன்னதாக டி.எஸ். ராஜு அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவிலேயே ரபேல் விமானங்களை கட்டமைக்க முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உண்டு. நமது என்ஜீனியர்கள் திறமையானவர்கள். இதுதொடர்பான கோப்புகளை மத்திய அரசு ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை குறிப்பிட்ட விலைக்குள் கட்டமைக்க முடியாத நிலை இருக்கலாம். ஆனால் இத்தகைய விமானங்களை கட்டமைக்கும் திறமை நம்மிடம் உண்டு என்பதை மறுக்க முடியாது என்று கூறியுள்ளார் டி.எஸ். ராஜு.
3 வாரங்களுக்கு முன்புதான் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications