மோடிஜி! வெளிநாட்டு பயணத்தில் நீங்க ரொம்ப பிஸி.. நாங்களோ விவசாயிகளுடன்.. போட்டு தாக்கும் ராகுல்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி தமது வெளிநாட்டு பயணத்தில் மிகவும் பிசியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் விவசாயிகளுக்காக விவசாயிகளுடன் நின்று போராடுகிறது என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்காக பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் பேசியதாவது:

உங்களுக்காக செத்து மடிவோம்
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் ராகுல் காந்தி இங்கே உங்களுக்காக உங்களுடன் நின்று கொண்டிருக்கிறேன்.
நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்காக செத்து மடியவும் காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கோட் சூட் அரசு
ஏழைகள், விவசாயிகள் ஒடுக்கப்பட்டு மகிழ்ச்சியற்று வாழும் இந்த இந்தியாவை காண நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு கோட் சூட் அரசாங்கம் தேவையில்லை.

மோடி மீது தாக்கு
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடியை ஏராளமானோர் ஆதரித்தார்கள்.. இந்தியாவையே மாற்றப் போவதாக அவர் கூறினார்.. நல்ல காலம் நிச்சயம் வரும் என்று நம்பிக்கையோடு கூறினார்.. அந்த நல்ல காலம் வந்ததா? லண்டன், சிங்கப்பூர், அமெரிக்கா என பல நாடுகளுக்கும் போகிறார் பிரதமர் மோடி... உங்களுக்கான அந்த நல்ல காலம் வந்ததா?
|
அகிலேஷ் யாதவுக்கு...
உத்தரப்பிரதேச அரசு, கரும்பு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த மாநிலத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ், மாற்றத்தைக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தார்... உங்களுக்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது.. மக்களிடம் விவசாயிகளிடம் போய் அவர்களது குறைகளைக் கேட்டு தீர்வு காணங்கள்.. மூடப்பட்ட கரும்பாலைகளைத் திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications