அல்வார்: 6 கி.மீ தூரத்தை 3 மணி நேரமாக கடந்த போலீஸ்.. இதுதான் புதிய இந்தியாவா... ராகுல் தாக்கு
அல்வார் சம்பவத்தில் 6 கி.மீ. தூரத்தை ஆற அமர 3 மணி நேரமாக போலீஸ் கடந்ததால்தான் அவர் உயிரிழக்க நேரிட்டது என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
மும்பை: பசு காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட அல்வாரை மருத்துவமனையில் உடனடியாக கொண்டு செல்லாமல் போலீஸார் ஆற அமர டீக்குடித்துவிட்டு 6 கி.மீ. தூரத்தை 3 மணி நேரமாக கடந்ததுதான் புதிய இந்தியாவா என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அரியாணா மாநிலம் கோல்கான் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் கான் (28). இவரும் இவரது நண்பர் அஸ்லாம் ஆகியோரும் சேர்ந்து ராஜஸ்தானின் அல்வாரில் லாலாவண்டி கிராமத்தில் காட்டு பகுதியில் இரு மாடுகளை வாங்கிக் கொண்டு அவர்களது கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

போலீஸார்
அப்போது அங்கு அவர்களை பசு தீவிரவாதிகள் வழி மறித்தனர். பின்னர் அவர்களை கடுமையாக தாக்கினர். இதையடுத்து அஸ்லாம் மட்டும் எப்படியோ தப்பி ஊருக்குள் வந்து நடந்தவற்றை கூறினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

உயிருக்கு போராட்டம்
அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அக்பர் கானை முதலில் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பதிலாக மாட்டை கொண்டு சென்று கொட்டகையில் அடைத்தனர். அதன்பின்னர் உயிருக்கு போராடியவருடன் நடுவழியில் இறங்கி டீக்குடித்துவிட்டு சென்றனர்.

ராகுல் காந்தி கண்டனம்
இதையடுத்து 6 கி.மீ தூரம் கொண்ட மருத்துவமனையில் 6 மணி நேரத்தில் சென்றடைந்தனர். இதனிடையே அக்பர் கான் உயிரிழந்தார். போலீஸாரின் இச்செயலை ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.

டீக்குடித்தனர்
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 6 கி.மீ. தூரம் கொண்ட மருத்துவமனையை 3 மணி நேரமாக போலீஸார் கடந்தனர். ஏன்? மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டீக்குடித்தனர்.
|
வெறுப்பு
இதுதான் மோடியின் குரூர புதிய இந்தியா. மனிதாபிமானம் வெறுப்பாக மாறிவிட்டது. மக்கள் நசுக்கப்பட்டு இறுதியில் உயிரிழக்கின்றனர் என்று ராகுல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications