பெண்களை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரமிது.. ராகுல் #MeToo
டெல்லி: பெண்களை மரியாதையுடனும் கவுரவத்துடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பதற்கான நேரம் இது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.
It’s about time everyone learns to treat women with respect and dignity.
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2018
I’m glad the space for those who don't, is closing. The truth needs to be told loud and clear in order to bring about change. #MeToo
மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது என்றார் ராகுல்.