காங். உயர்நிலை கூட்டம்.. பிரதமருடன் ராகுல் ஆலோசனை. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வுக் குழுவை நேற்று காங்கிரஸ் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இன்றைய உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications