டிவிட்டரில் ராகுல் காந்தி செய்த திடீர் மாற்றம்!
ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தி தனது பழைய டுவிட்டர் கணக்கில் அதிரடி மாற்றம் செய்துள்ளார். புதிய பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கை தொடர்கிறார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் நேற்று கூட்டம் தொடங்கியது. இந்த 84-ஆவது கூட்டம் நாளை முடிவடையும்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் புதிய டுவிட்டர் கணக்கு குறித்து காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தனை நாட்கள் "@OfficeofRG" என்றிருந்த அவரது டுவிட்டர் கணக்கு @RahulGandhi-ஆக மாறியது.
|
உரையாடல்
புதிய டுவிட்டர் கணக்கிலிருந்து ராகுல் முதல் டுவீட்டை இன்று காலையில் பதிவிட்டார். அதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளோரை வரவேற்கிறேன். அடுத்த இரு நாட்களுக்கு உங்களுடன் நான் உரையாட போகிறேன்.
துடிப்பான
அச்சமயம் கட்சியை வலுப்படுத்தவும் , துடிப்பானதாகவும் உருவாக்குவதற்காக ஆக்கப்பூர்வமான கண்ணோட்டங்களை பகிருங்கள். ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டிருந்தார்.
|
ஆலோசனைகள்
இன்று காலை இரண்டாவது டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதில் புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளேன். இதில் மக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
திறம்பட முன்வைத்தார்
ராகுல்காந்தி கடந்த 2015-ஆம் ஆண்டு டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார். அதில் மத்திய அரசுக்கு எதிராக அவரது கருத்துகளை திறம்பட முன்வைத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சாரம்
ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2019-ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலையொட்டி கட்சியை கட்டமைக்க அச்சாரம் போடுவதாக இருக்கும் என கருதப்படுகிறது.