அனல் பறக்க நடந்த விவாதத்திற்கு மத்தியில் கையை தலைக்கு அண்டக் கொடுத்து தூங்கிய ராகுல் காந்தி...!
டெல்லி: லோக்சபாவில் இன்று சுஷ்மா சுவராஜ் விவகாரம் தொடர்பாக படு சூடான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கையை தலைக்கு அண்டக் கொடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் தொடர்பாக லோக்சபாவை நடத்த விடாமல் முடக்கி வைத்து வந்தது காங்கிரஸ். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விவாதத்திற்கு அனுமதி அளித்தார் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.
Young Leader of Congress's 1st Family Sleeping on the day of an imp debate @LalitKModi #VikasVirodhiCongress pic.twitter.com/OUzGNTP0iV
— Anurag saxena (@saaxenanurag) August 12, 2015 இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சரமாரியாக கேள்வி எழுப்பியபடி அவர் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு அருகில் இருந்த ராகுல் காந்தி கையை தலைக்கு அண்டக் கொடுத்து குட்டித் தூக்கம் போட்டபடி அமர்ந்திருந்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
அவர் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி் போய் விட்டாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications