கிரிமினல் எம்.பிக்களை பாதுகாக்கும் அவசர சட்டம்- பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராகுல் காந்தி கடிதம்!
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ள அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது, கிழித்து குப்பையில் எறிய வேண்டும் என்று கடுமையாக சாடிப் பேசிய ராகுல் காந்தி அதற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில், பல இக்கட்டான சூழ்நிலைகள் நேரிட்டபோது அவற்றை சிறப்பாக கையாண்டுள்ள உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
இந்த அவசர சட்டம் குறித்த விவகாரத்தில் நான் கூறியுள்ள கருத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும் என்று எனக்குத் தெரியும். எனினும், எனது கருத்தின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்' என்று அதில் கூறியுள்ளார்.
Rahul Gandhi has told Prime Minister Manmohan Singh that his views on the controversial ordinance on convicted lawmakers is not in harmony with the Cabinet decision or the Core Group’s view. Gandhi, who had publicly called the ordinance to protect convicted MPs and MLAs from immediate disqualification as complete nonsense causing tremors in the government, however, expressed his greatest admiration for the Prime Minister’s leadership in extremely difficult circumstances.