பிரபாகரன் உடலைப் பார்த்த போது எனக்கும் பிரியங்காவுக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டது:ராகுல் 'பரபர' பேச்சு
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடலைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தில் கூறியுள்ளார்.
வதோதரா : தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு 'குற்ற உணர்வு'ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று அவர் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அதில், வேலைவாய்ப்பு இல்லாத கோபத்தில் மக்கள் இருப்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை பாஜக அரசுக்கு இருப்பதாக கூறினார் ராகுல். மேலும் மற்றொரு கேள்வி ஒன்றுக்கு ராகுல் காந்தி அளித்த பதில்:

துக்கமாக உணர்ந்தோம்
அரசியல்வாதிகள் மனதில் தோன்றவதை சொல்லமாட்டார்கள் ஆனால் நான் அப்படியில்லை. நான் என் மனதில் பட்டதைத் தான் சொல்வேன். நான் அடிக்கடி என் தந்தையைப் பற்றி நினைத்து பார்ப்பதுண்டு. என்னுடைய அப்பாவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொன்றார். ஆனால் இலங்கை கடற்பகுதியில் அவர் கொல்லப்பட்டு கிடந்த காட்சியை பார்த்து எனக்கு துக்கமாக இருந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

குற்ற உணர்வுகூட ஏற்பட்டது
உடனடியாக பிரியங்கா காந்திக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பிரியங்காவிற்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னுடைய அப்பாவைக் கொன்றவர் இறந்து கிடக்கிறார் ஆனால் எங்களுக்கு துக்கமாக இருந்தது, எங்களுக்கு ஒரு குற்றஉணர்வு ஏற்பட்டது என்று கூட சொல்லாம்.

மகிழ்ச்சியடையவில்லை துக்கப்பட்டோம்
பிரபாகரனின் கடைசி மகனின் வாழ்க்கை எவ்வளவு போராட்டகளமாக இருந்ததோ அப்படித் தான் எங்களுடைய வாழ்க்கையும் இருந்தது. தந்தையை இழந்த துக்கத்தில் தான் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையைக் கொன்றவர் இறந்துவிட்டார் என்று நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை மாறாக துக்கப்பட்டோம்.
வளர்ப்பு அப்படி
இது நாங்கள் வளர்ந்த விதம் என்று கூட சொல்லலாம். இதற்காக நீங்கள் எங்களை முட்டாள், கோமாளி என்று என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டோம், ஏனெனில் காந்தி குடும்பத்தின் வளர்ப்பு அப்படி.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications