பாதுகாப்பிற்காக பெண்கள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு!
டெல்லி : ரயில் பயணத்தின் போது பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் எனவும், இதற்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்படும் எனவும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பிற்கென நிர்பயா நிதி என்ற பெயரில் நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த ரூ.1,000 கோடி நிர்பயா நிதி தொடர்ந்து பயன்படுத்தப் படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சமீபகாலமாக ரயில் பயணங்களின் போது சில ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஆண் பயணிகளால் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைகளுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட்டில் பெண்களின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது.
அதன்படி, 2015- 16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நிர்பயா நிதி பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், இந்த நிர்பயா நிதியான ரூ. 1000 கோடியில் இருந்து எவ்வளவு பணம் இதற்கென செலவு செய்யப்படும் என அவர் கூறவில்லை.

அதேபோல், ரயில்வேயில் தூய்மை பராமரிப்பு பணியை மேற்கொள்ள வெளி நிறுவன உதவி நாடப்படும் என்றும், பாதுகாப்புக்காக பெண்கள் பெட்டியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்' என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக சில முக்கிய ரயில்கள், புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகளில் இந்த கேமராக்கள் அமைக்கப்படும்.
மேலும், நாடு முழுவதும் 24 மணி நேர ரயில்வே பயணிகள் குறைதீர்க்கும் 138 அவசர அழைப்பு சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications